அணித்தலைவராக களமிறங்கும் ஷிகர் தவான்!!

431

dawan

சம்பியன்ஸ் லீக் T20 தகுதிச் சுற்றில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக அதிரடி வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்தாவது சம்பியன்ஸ் லீக் T20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வருகிற 21ம் திகதி தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து மும்பை, சென்னை, ராஜஸ்தான் என்று மூன்று அணிகள் பங்கேற்கவுள்ளன.

தவிர அவுஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட், மேற்கிந்திய தீவுகளின் டிரினிடாட் அண் டுபாகோ உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக பங்கேற்கும்.

வரும் செப்டம்பர் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நடக்கவுள்ள தகுதிச் சுற்றின் மூலம் மீதமுள்ள 2 அணிகள் தெரிவு செய்யப்படும். இதில் ஐதராபாத்(இந்தியா), ஒடாகோ வோல்ட்ஸ்(நியூசிலாந்து) கந்துரட்ட மரூன்ஸ்(இலங்கை) மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் வால்வ்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை உள்ளூர் T20 சம்பியன் கந்துரட்ட மரூன் அணிக்காக குமார் சங்கக்கரா களமிறங்க உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.