குளியாப்பிட்டி – தும்மலசூரிய பிரதேசத்தில் தோஷம் கழிப்பதற்காக பூசகர் ஒருவர் வழங்கிய ஒருவகை திரவம் விஷமானதால் அதனை அருந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்துவரும் சிலாபம் – பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான இந்த பெண், தனக்கு ஏற்பட்டிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக குறித்த மடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த பூசகர் மந்திரிக்கப்பட்ட ஒருவகை திரவத்தை அப்பெண்ணுக்கு பருகுவதற்காக வழங்கியுள்ளார் எனவும் அதன்பின்னர் அதனை அருந்திய குறித்த பெண் சுகயீனமடைந்ததனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந் துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.