பூசகரினால் வழங்கப்பட்ட திரவம் நஞ்சானதால் உயிரிழந்த பெண்!!

313

குளி­யாப்­பிட்டி – தும்­ம­ல­சூ­ரிய பிர­தே­சத்தில் தோஷம் கழிப்­ப­தற்­காக பூசகர் ஒருவர் வழங்­கிய ஒரு­வகை திரவம் விஷ­மா­ன­தால்­ அ­தனை அருந்­திய பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

கண­வ­ரி­ட­மி­ருந்து பிரிந்து தனி­யாக வசித்­து­வரும் சிலாபம் – பங்­க­தெ­னிய பிர­தே­சத்தை சேர்ந்த 38 வய­தான இந்த பெண், தனக்கு ஏற்­பட்­டி­ருந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்­வ­தற்­காக குறித்த மடத்­துக்கு சென்­றுள்ளார்.

அங்­கி­ருந்த பூசகர் மந்­தி­ரிக்­கப்­பட்ட ஒரு­வகை திர­வத்தை அப்­பெண்­ணுக்கு பரு­கு­வ­தற்­காக வழங்­கி­யுள்ளார் எனவும் அதன்­பின்னர் அதனை அருந்­திய குறித்த பெண் சுக­யீ­ன­ம­டைந்­த­த­னை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந் துள்ளதாக தும்மலசூரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.