விஷமான உணவை உற்கொண்ட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவரும் பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட உணவே இவ்வாறு விஷமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் பிறந்தநாள் கொண்டாட்ட வீட்டினை பரிசோதனை செய்தனர்.
இதன்போது சமைக்கப்பட்ட இறைச்சியே இவ்வாறு விஷமாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த இறைச்சியினை வல்வெட்டித்துறையில் உள்ள இறைச்சிக்கடையில் தாம் கொள்வனவு செய்ததாக வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னனெடுக்கப்பட்டுள்ளன.