வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இருக்கைப் பட்டி அணியாது வேகமாக டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி ஒருவர் வீதித் தடுப்பில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் ஏற்பட்ட விபத்தில் மரணந்துள்ளதாக பறயனாலங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முருங்கன் பகுதியில் இருந்து பூனாவ பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வாகனம் வவுனியா, செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் வேகமாக பயணித்த போது வீதியில் போடப்பட்டிருந்த வேகத் தடையில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையால் டிப்பர் வாகனம் வேகத்தடையைத் தாண்டி பாய்ந்தபோது சாரதி டிப்பர் வாகனத்தில் முன் கண்ணாடி வழியாக தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வாகனத்தை செலுத்திய சாரதி இருக்கைப் பட்டி அணியவில்லை. இதன்காரணமாகவே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார் என விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் முருங்கனைச் சேர்ந்த பிலிப்பு ஜேசுராஜா (வயது 55) என்பவரே மணமடைந்தவாராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பறயனாலங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






