வவுனியாவில் ஒளவையார் நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

906

 
வவுனியாவில் இன்று (13.01.2017) காலை 9 மணியளவில் தமிழ் விருட்சம், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகரவரியிறுப்பாளர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ஒளவையார் நினைவு தினம் வெளிக்குளம் சந்தியிலுள்ள அன்னாரது நினைவுத்தூயில் இடம்பெற்றது.

அன்னாரின் நினைவுதினத்தை முன்னிட்டு மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வில் ஒளவையார் திருவுருவச்சிலையினை நிறுவிய முன்னாள் நகரசபை பிதாவும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கள், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபாரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், பிரதேச காலாச்சார உத்தியோகத்தர் த.பிரதீபன், முன்னாள் நகரபிதா சந்திரகுலசிங்கம், தமிழ்த் தேசிய இளைஞர் கழகத் தலைவர் சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், மற்றும் சமூக ஆர்வலகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.