வவுனியாவில் ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றது.
இதேவேளை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி தலைமையில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
இப் பொங்கல் நிகழ்வின் போது இடமாற்றம் பெறவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.































