வவுனியாவில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் சிறப்பம்சமாக வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் அருட்தந்தை சத்தியராஜ் தலைமையிலும் பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்து ஆலயங்களில் இந்து மதகுருக்கள் தலைமையில் பொங்கல் இடம்பெற்றிருந்ததுடன் சிறுவர்கள் முதல் பெயரியவர் புத்தாடைகள் அணிந்து பட்டாசு கொளுத்தி பொங்கல் பொங்கியிருந்தனர்.
வவுனியா நகரிலும் வர்த்தக நிலையங்களில் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.











