தைத்திருநாளில் தமிழர்கள் மனம் இனிமைபெற வாழ்த்துகிறேன் : வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான்!!

593

தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினாலும் உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கை திருநாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற எம் இனிய உறவுகள் தமிழர்கள் அனைவரினதும் இல்லங்களில் இனிமையான உள்ளங்களில் பொங்கல் பொங்கி தமிழர்களின் மனம் இனிமைபெறவும் அபிலாசைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் எம் மக்களின் உள்ளங்களில் இவ’வாண்டில் இனிமைபெறவும் வாழ்த்துகின்றேன் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான கே காதர் மஸ்தான் அனுப்பிய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.