நெருப்பை பயன்படுத்தி முடி திருத்தும் நபர் : பாகிஸ்தானில் பரவும் புதிய கலாச்சாரம்!!

581

பாகிஸ்தானில் சலூன்கடைக்காரர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு நெருப்பை பயன்படுத்தி முடி திருத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த சலூன்கடைக்காரர் ஒருவர் அங்கு முடி திருத்த வரும் வாடிக்கையாளர்களின் தலையில் கத்திரிக்கோலுக்கு பதிலாக தீ வைத்து முடியை சரிசெய்கிறார்.

முதலில் முடிவெட்டிக்கொள்ள வந்திருப்பவரின் தலையில் கிரீம் மற்றும் பவுடரை தடவி அதில் தீ வைக்கிறார். தீ நன்கு எரிந்து கொண்டிருக்கும் போது சீப்பினால் முடியை வேகமாக சீவுகிறார். அவ்வாறு சீவும் போது தீ அணைந்துவிடுகிறது.

தலை முடியில் தீ வைத்தாலும் கூட முடி தீப்பற்றி எரியவும் இல்லை, அளவும் குறையவில்லை. முடியை நேர்படுத்துவதற்காக இ்வ்வாறு செய்யப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து சமூகவலைத்தளங்களில் ஒரு சிலர் இது ஆபத்து என்றும் ஒரு சிலர் இதை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.