வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் கணவன் மனைவி இருவரும் கைது!!

1069

வவுனியாவில் நேற்று இரவு 10.30 மணியளவில் கைக்குண்டு, இடியன் துப்பாக்கி என்பனவற்றுடன் காட்டில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகிய இருவரையும் ஓமந்தைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

ஓமந்தைப் பொலிசார் நேற்று மேற்கொண்ட நடவடிக்கையின்போது வவுனியா பாலமோட்டை, காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வசித்து வந்த கணவன் மனைவி ஆகியோரைக்கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது இவர்களிடமிருந்து கைக்குண்டு இடியன் துப்பாக்கி என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் இவர்கள் இருவரும் காட்டில் பல காலமாக வசித்து வந்துள்ளதாகவும் கணவன் மீது மாங்குளம், ஓமந்தை ஆகிய பொலிஸ் நிலையங்களில் கசிப்பு உற்பத்தி செய்துவருவதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பாலமோட்டை கோவில்குஞ்சுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.