வவுனியாவில் சிறுமி மீது துஸ்பிரயோகம்!!

619

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் நேற்று (15.01.2017) காலை 9 மணியளவில் 14 வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்தாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,

நேற்று காலையில் வீட்டில் தனியாக இருந்த 14 வயதுச் சிறுமி ஒருவரை அவரது 26 வயதுடைய உறவினர் ஒருவர் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கடை மூடியிருந்ததையடுத்து அருகிலுள்ள யாருமற்ற வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துள்ளதை அறிந்த வீட்டார் சிறுமியிடம் விடயத்தினை கேட்டறிந்ததுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன் சிறுமியை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

முறைப்பாட்டினைடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் பின் உறவு முறையான குறித்த இளைஞனைக் கைது செய்ததுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.