ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சடலங்களாக மீட்பு, மேலும் ஒருவரை காணவில்லை!!

457

ruhunu

ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை கடற் பகுதிக்கு குளிக்கச் சென்று காணாமற்போன நால்வரில் இரு மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நீரில் மூழ்கி காப்பாற்றப்பட்ட நிலையில் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு மாணவன் நீரில் மூழ்கிய நிலையில் இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.