வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தின் 15ம் திருவிழாவும் திருக்கல்யாண நிகழ்வும்!!

395

 
வவுனியா தாண்டிக்குளம் அருள் மிகு அற்புத ஐயனார் ஆலயத்தின் 15ம் நாள் திருவிழாவும் திருக்கல்யாண நிகழ்வும் நேற்றைய தினம் (15.01.2017 ) ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் தலைமையில் வெகு சிறப்பாக முன்னெடுத்து நடாத்தப்பட்டது.

ஆலயத்தின் மகோற்சவ பெருவிழாவானது கடந்த 01.01.2017 அன்று ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து 15ம் திருவிழாவின் விசேட பூசை நிகழ்வாக திருக்கல்யாண நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

நடைபெற்ற திருக்கல்யாண விசேட மகோற்சவ பூசை நிகழ்வில் தம்பப்பூசை, வசந்த மண்டப பூசை என்பன நடைபெற்றதும் சுவாமி உள்வீதி வருகைதந்ததும், அலங்கரிக்கப்பட்ட கல்யாண பந்தலில் வைத்து அருள்மிகு அற்புத ஐயனாருக்கும் பூரணணை, பூட்கலா தேவிகளிற்கும் திருக்கல்யாண நிகழ்வு பாரம்பரிய முறையில் வெகு சிறப்பாக நடை பெற்றது

நடைபெற்ற திருக்கல்யாண பூசை நிகழ்வினைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகைதந்ததுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஐயனார் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பில் கலை நிகழ்வுகளும் வெகு சிறப்பாக நடை பெற்றது.