நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு குடும்பத்தினருடன் சென்ற சிறுவன் ஒருவன் உகந்தமலை மலையிலுள்ள சுனையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். மட்டு.கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த ரவி அபிலாஸ் என்ற 11வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.
இந்த மாணவன் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 171 புள்ளியைப்பெற்று சிறப்புச் சித்தியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலையடுத்துள்ள உகந்தமலை முருகன் ஆலயத்துக்கு தனியார் பஸ்ஸில் குடும்பத்தாருடன் உகந்தமலை சென்றுள்ளனர்.
அங்கு மலைமேலுள்ள கோவிலுக்கு நேர்த்தி செலுத்தச் சென்றபோது அருகிலுள்ள நீர்நிரம்பிய சுனைக்குள் தவறி வீழ்நதே இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளான். இவரது தந்தை ஒரு பொலிஸ் அதிகாரியாவார். சடலம் பொத்துவில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இந்தச் சிறுவன் அருகிலுள்ள பெரிய சுனையில் தவறி வீழ்ந்ததனைக் கண்ணுற்று அவரைக் காப்பாற்ற ஒரு பெண்ணும் ஆணும் சுனைக்குள் பாய்ந்தனர். சிங்களவரான ஒரு பெண் பக்தரே ஆற்றில் பாயந்துள்ளார்.
இந்த நிலையில் அவர்களும் நீருக்குள் பாய்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த போது அவர்களைக் காப்பாற்ற மேலும் இரு பாண்டிருப்பு இளைஞர்கள் பாய்ந்து இருவரைக் காப்பாற்றினார்.
இந்த நிலையில் சிறுவனை அவர்களால் மீட்க முடியாத நிலையில் அருகிலுள்ள கடற்படையின், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் சுழியோட்டித் தேடியபோது அரைமணி நேரத்தின் பின்னர் சிறுவன் மீட்கப்பட்டான்.
பின்னர் பாணமை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அங்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். நேற்று திங்கட் கிழமை பிரேத பரிசோதனை நடாத்தப் பட்டு சடலம் உறவினரிடம் கையளிக் கப்பட ஏற்பாடாகியிருந்தது.






