பழம் கொடுத்த சுவீடன் நாட்டுப் பெண்ணின் கையை பதம் பார்த்த யானை!!

525

கேகாலை, பின்னவல யானைகள் சரணாலயத்தில் யானையொன்றுக்கு கையால் பழங்களைக் கொடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணின் கையை அந்த யானை பற்றி இழுத்து முறித்ததால், கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

குச்த ஓ கூதணிணூ எனும் 48 வயதான சுவீடன் நாட்டுப் பெண்ணே இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார். சுவீடன் நாட்டிலிருந்து வந்த சுற்றுலா குழுவொன்று மாத்தறையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்தது.

நேற்று கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி வாகனமொன்றில் சென்ற இவர்கள் கேகாலை பின்னவல யானைகள் சரணாலயத்துக்கும் சென்றிருந்தனர்.

அச்சமயம் அங்கு நின்றிருந்த யானையொன்றுக்கு பழங்களைக் கொடுக்க இந்தப் பெண் முயன்றபோது திடீரென அந்த யானை அவரது வலது கையைப் பற்றி இழுத்து முறித்துள்ளது.

கேகாலை வைத்தியசாலையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பெண்ணின் நிலை திருப்திகரமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.