வரட்சியான காலநிலையால் நாடு முழுவதும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கபப்ட்டுளளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு |தேவையான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிபில்லலை தெரிவிததுள்ளார்.
13 மாவட்டங்களுக்கு குடிநீரை பெற்றுக்கொடுப்பதறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு, விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை மற்றும் மின்சார உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆகவே, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுமாயின் உடனடியாக 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்திற்கு அறிவிக்கும் பட்சத்தில் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிராந்திய அலுவலகங்களூடாக நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் என பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயின் பாதிப்பிற்குள்ளாகியுள்ள பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக யாழ்ப்பபாணம், மன்னார், திருகோணமலை, பதுளை, மொனராகலை, கம்பஹா உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 24,324 குடும்பங்களை சேர்ந்த 85,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 8,200 குடும்பங்களை சேர்ந்த 31,300 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






