ஸ்ரீசாந்த் சார்பு சட்டத்தரணி ஆவேசம்!!

309

sreesanth

ஆறாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நடந்த சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கிட் சவானுக்கு பி.சி.சி.ஐ., வாழ்நாள் தடை விதித்தது.

இது குறித்து ஸ்ரீசாந்த் சார்பாக ஆஜரான சட்டத்தரனி ரெபேக்கா ஜோன் கூறுகையில் ஸ்ரீசாந்த் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். இவருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரவி சவானி அளித்துள்ள அறிக்கை உண்மையானது என்று கூற முடியாது. எனவே, ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை இயற்கையின் நீதிக்கு எதிரானது என்றார்.