மத்திய வரிசையில் களமிறங்க விருப்பம் தெரிவித்த ஷேவாக்!!

295

sehwag

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ஷேவாக் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக சரியாக விளையாடததால் கிரிக்கெட் சபை அவரை ஒதுக்கி வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் நடுவரிசையில் விளையாட விருப்பம் தெரிவித்து கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2வது மற்றும் 3வது 4 நாள் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ஷேவாக் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி தெரிவாளர் சந்தீப் பட்டீல் ஷேவாக்கை தொடக்க ஆட்டக்காரராக தெரிவு செய்துள்ளார். 35 வயதை நெருங்கும் ஷேவாக் சமீபகாலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓரங்கட்டுப்பட்டு வருகிறார்.

ஷேவாக்குக்குப் பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். இதனால் ஷேவாக் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். கடைசியாக ஷேவாக் அவுஸ்திரேலியாவுக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் விளையாட இருக்கிறது. அப்போது இந்திய அணியில் நடுவரிசையில் களமிறங்கி விளையாட ஷேவாக் விருப்பம் தெரிவித்தள்ளார்.

இதற்குக் காரணம் அவுஸ்திரேலியா இந்தியா வந்தபோது கம்பீர் மற்றும் ஷேவாக் ஆகியோருக்குப் பதிலாக களமிறங்கிய தமிழக வீரர் முரளி விஜய்- தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

மேலும் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது கடைசி போட்டியில் தவான் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக புஜாரா விளைடினார். இதனால் ஷேவாக் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்குவது முடியாத காரியம் ஆகிவிட்டது.

இதனால் நடுவரிசையில் விளையாட முயற்சி செய்து வருகிறார். தற்போது இந்திய அணியில் நடுவரிசையில் விளையாடும் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.

ரகானேவை நடுவரிசை வீரராக இறக்கினார்கள். ஆனால் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல் ரெய்னாவும் நடுவரிசையில் சோபிக்கவில்லை. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா அணியில் இடம்பெற்றாலும் சரியாக விளையாடுவாரா எனத்தெரியவில்லை.

டிராவிட், லஷ்மண், கங்குலி ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரர்கள் இல்லை. அதனால் ஷேவாக் நடுவரிசையில் விளையாட போட்டியிருக்காது என்ற நிலையில் அதில் விளையாட விரும்புகிறார்.