நடிகை பிரியாமணி ஐதராபாத்தில் தனக்கு பிடித்த விஷயங்களை பட்டியலிட்டு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கே:– உங்களுக்கு பிடித்தது.
ப:– என் கண்களும், சிரிப்பும் ரொம்ப பிடிக்கும். எனக்கு நல்ல குணம் இருக்கிறது. அதையும் ரசிக்கிறேன்.
கே:– பிடித்த நடிகர்கள்?
ப:– கமலஹாசன், ஸ்ரீதேவி, அமீர்கான்.
கே:– ஓய்வை எப்படி கழிப்பீர்கள்?
ப:– டி.வி. பார்ப்பேன். நண்பர்களை சந்திப்பேன்.
கே:– மறக்க முடியாத பாராட்டு?
ப:– பருத்திவீரன் படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது எனக்கு கிடைத்ததும் அம்மாவும், அப்பாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பாராட்டினார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெரிய பாராட்டு ஜூனியர் என்.டி.ஆர். நான் நன்றாக நடனம் ஆடுவதாக பாராட்டினார். அதுவும் மறக்க முடியாது.
கே:– உங்கள் அடுத்த ஆசை?
ப:– மேக்கப் போடாமல் நடிக்க வேண்டும்.
கே:– ரசிகர்களுக்கு உங்களைப் பற்றி தெரியாத விஷயம்?
ப:– நான் சினிமாவில் வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய். இது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இதுவரை இருந்தது.
கே:– பார்ட்டிக்கு போவீர்கள்?
ப:– நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்வது உண்டு.
கே:– பிடித்த உணவு?
ப:– ரவா தோசை சாப்பிடுவேன். பிரியானியும் விரும்பி சாப்பிடுவேன்.
கே:– கணவராக வருபவர் எப்படி இருக்க வேண்டும்,?
ப:– எனக்கு கணவராக வருபவருக்கு திறமையாக பேச தெரியனும், தங்கு, தடை இல்லாமல் பேச வேண்டும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருக்கனும். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.