பேஸ்புக்கினால் 29 வயதான இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி!

331


கம்பஹாவை சேர்ந்த பெண்ணொருவரிடம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பிரதான நீதவான் டீ.ஏ.ருவண் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.பேஸ்புக்கில் நண்பராகி குறித்த பெண்ணிடம் 8 லட்சத்து 65 ஆயிரதம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த குற்றச்சாட்டில் நைஜீரிய இளைஞனருக்கு நீதிபதி விளக்கமறியல் உத்தரவிட்டார்.

சந்தேகநபரான நைஜீரிய நாட்டவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்து கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதன்போது கம்பஹா மோசடி விசாரணை பிரிவினர் கோட்டை நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கமைய சந்தேகநபர் சிறைச்சாலை ஊடாக கம்பஹா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கம்பஹா டிக்மன் வீதியில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார்.இந்த நிலையில் சந்தேக நபரான நைஜீரிய நாட்டவர் பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அறிந்து கொண்டு, அந்த பெண்ணுக்கு நைஜீரிய நாட்டில் இருந்து பரிசு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.அந்த பரிசில் உள்ள தங்க நகைகளுக்கு வரி செலுத்த வேண்டும் என கூறி பல முறை இலங்கை வங்கிகள் இரண்டில் பணம் வைப்பு செய்யுமாறு கூறி இவ்வாறு பணத்தினை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் முறைப்பாட்டாளர் வங்கியில் பணம் வைப்பு செய்ததற்கான தகவல்களை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபரிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக் கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகளின் ஆதரவு கிடைக்காத நிலையில் சந்தேக நபர் பேஸ்புக் ஊடாக இலங்கை பெண்களிடம் நட்பு ஏற்படுத்தி பணம் மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.