முல்லைத்தீவில் 1,500 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கவுள்ள ஜனாதிபதி!

338

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு 1,500 பேருக்குக் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களையும், 500 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியையும் வழங்கி வைக்கவுள்ளார்.எதிர்வரும் 25ஆம் திகதி முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் இடம்பெறும் நிகழ்வில் பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவுடன் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைப்பதோடு. அத்துடன் 500 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வைக்கவுள்ளார்.மேலும் கேப்பாப்புலவில் விடுவிக்கப்படும் நிலங்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமொன்று முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர், மாவட்ட செயலர் முல்லைத்தீவு மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.