மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

503

arrest1

மலசலகூட கதவில் சூட்சமமான முறையில் கையடக்கத் தொலைபேசியை பொருத்தி மேலதிக வகுப்புக்கு வரும் மாணவிகளை நிர்வாண படமெடுத்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மீண்டும் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவருக்கு விளக்கமறியல் நீடித்து அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டார்.
குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த நீண்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துவிட்டார்.

நிர்வாண வீடியோ தரவு அடங்கிய ஆவணம் பரிசோதனைக்கென கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வலய குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.



மேலும் கைது செய்யப்பட்டவர் நிரந்தர ஆசிரியரா அல்லது தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியரா என உறுதிப்படுத்த விசாரணைகள் தொடர்வதாக அநுராதபுரம் வலய குற்ற விசாரணை பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கருத்துக்களை பரிசீலித்த அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான, சந்தேகநபரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.