லொரியுடன் மோதிய பஸ் : இருவர் பலி, 35 பேர் காயம்!!

477

கொழும்பு – கண்டி வீதி, பஸ்யால பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 05.00 மணியளவில் லொரி ஒன்றுடன் பஸ் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.