குரங்கை தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் பூனை!!

317

cat

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஈரானும் விண்வெளியில் ஆய்வு நிகழ்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற 2018ம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதற்காக தற்போது விலங்குகளை ரொக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி சோதனை நடத்தி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டில் எலி மற்றும் ஆமையை அனுப்பியது.

இந்த நிலையில், சமீபத்தில் பிஸ்காம் என்ற குரங்கை விண்வெளிக்கு அனுப்பினர். 2 நிமிட நேரம் பயணம் 120 கி.மீட்டர் தூரம் பயணம் செய்த அந்த குரங்கு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

தற்பேது அடுத்த கட்டமாக வருகிற மார்ச் மாதம் விண்வெளிக்கு பெர்சியன் இன பூனையை அனுப்ப ஈரான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பூனை நீண்ட அடர்ந்த ரோமங்களுடன் அகலமான முகம் கொண்டதாக இருக்கும்.

பூனையை தவிர எலி மற்றும் முயலை அனுப்பும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இந்த தகவலை ஈரான் விண்வெளி திட்ட சீனியர் அதிகாரி முகமது இப்ராகிம் தெரவித்துள்ளார்.