யாழில் உடன் பிறந்த சகோதரிக்கு பெண் செய்த காரியம்!!

224

போலியான அடையாள அட்டை மற்றும் போலியான கையெழுத்து ஆகியவற்றை சமர்பித்து தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த பெண் ஒருவரை தெல்லிப்பழை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மணற்குளம் அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த பெண் ஒருவருக்கு சமூர்த்தி வங்கியில் இருந்து பணம் கிடைத்துள்ளது. குறித்த பணத்தை அளவெட்டி பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் அவர் வைப்புச்செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி தனது வைப்பிலிருந்து பணத்தினை எடுப்பதற்கு குறித்த பெண் சென்ற போது, 45 ஆயிரம் ரூபாய் பணம், கணக்கிலிருந்து எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த பெண், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவரது சகோதரியே பணத்தைப்​பெற்றுக்கொண்டமை தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்து பெண்ணை கைதுசெய்ய முற்பட்ட போது, அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே, அவரை கைதுசெய்ய நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.