வவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் தாக்குதல்!!

270

வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (22.01.2017) மாலை 5.30 மணியளவில் இ.போ.ச ஊழியர் மீது தனியார் பேருந்தின் ஊழியர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா புதிய மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு நுழைய முற்பட்ட இ.போ.ச பேருந்தினை கடமையிலிருந்த இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வாயிலை திறக்க முற்பட்ட வேளையில் வாயிலை திறக்க வேண்டாமென தனியார் பேருந்தின் ஊழியரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் பேருந்து ஊழியரின் வார்த்தையினை பொருட்படுத்தாது வாயிலை திறந்தமையினையடுத்து கோபமடைந்த தனியார் பேருந்தின் ஊழியர் கடமையிலிருந்த இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

அத்துடன், தாக்குதலில் சிறு காயங்களுக்குள்ளான இ.போ.ச பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.