இளம் பெண்ணுக்கு நேரலையில் பாலியல் துன்புறுத்தல் : பொலிசார் எடுத்த துணிச்சல் முடிவு!!

271

சுவீடனில் இளம் பெண் ஒருவரை பேஸ் புக் நேரலையில் மூன்று மணி நேரம் தொடர்ந்து பலாத்காரம் செய்த ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுவீடன் நாட்டின் Uppsala நகரத்தில் பொதுமக்கள் தங்கும் அப்பார்ட்மெண்டில் இளம்பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்துள்ளனர். இது பேஸ் புக் நேரலையில் தொடர்ந்து வந்துள்ளது.

இந்த நேரலையை ஏராளமானோர் கண்டுள்ளனர். ஆனால் சிலர் இது ஒரு நாடகம் என்றும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இது போன்று செய்கிறார்கள் என கூறியுள்ளனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து நடந்ததால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் Josefine Lundgren (21) என்ற இளம் பெண் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த நேரலையை பார்த்த பொலிசார். அந்த பெண் பாதிப்புக்குள்ளாக இருக்கும் இடத்தை பேஸ் புக் நேரலையின் போது அதில் உள்ள மேப்பில் கண்டுள்ளனர்.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் அப்பெண்ணை காப்பாற்றி இந்த நேரலையையும் நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நேரலையை பொலிசார் நிறுத்தி அந்த மூவரையும் கைது செய்த பின்னரே இது ஒரு உண்மை சம்பவம் என நேரலையை கண்ட பலரும் நம்பியுள்ளனர்.