லசித் மாலிங்கவுக்கு தனி விமானம் ஒன்றை அனுப்பி வைத்த அம்பானி!!

665

 
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மாலிங்கவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.பீ.எல் போட்டிக்கு லசித் மாலிங்கவை இணைத்துக் கொள்வதற்காக முக்கேஷ் இந்த விமானத்தை மாலிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவ்வணியில் மாலிங்க இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.