கைத்தொலைபேசி வாங்கச்சென்ற இளைஞரை 3 தினங்களாக காணவில்லை!!

209

கைத்தொலைபேசி வாங்குவதற்காகச் சென்ற 17 வயது இளைஞனை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என கல்முனைப் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.

கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச் சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞனே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லையெனவும், உறவினர் வீடுகளில் தேடியபோதும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைத்தொலைபேசி வாங்க வேண்டும் என்ற விடாபிடியுடன், கைச்செயினை விற்றாவது கைத்தொலைபேசி வாங்கவேண்டும் என குறித்த இளைஞர் நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.