சீனாவில் இளம்பெண் ஒருவர் நடந்துக்கொண்டு செல்போனை பயன்படுத்தியபோது நிகழ்ந்த விபத்து வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.
சீனா தலைநகரான பெய்ஜிங்கில் சில தினங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் ஷொப்பிங் சென்றுள்ளார்.
வணிக வளாகம் ஒன்றில் பொருட்களை வாங்கி ஒரு கையில் வைத்துக்கொண்டு மறுக்கையில் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியவாறு நடந்துச் சென்றுள்ளார்.
பெண் நடந்தபோது அவருக்கு முன்னால் நீரூற்று ஒன்று இருந்ததை அவர் கவனிக்கவில்லை. தலை குனிந்தவாறு சென்ற அவர் கண் இமைக்கும் நேரத்தில் நீரூற்றில் விழுந்துள்ளார்.
நடந்த தவறை உணர்ந்த அப்பெண் வேகமாக எழுந்து வெளியே சென்றுள்ளார். இச்சம்பவம் வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
நீரூற்று இல்லாமல் சாலையில் இவ்வாறு நடந்துச் சென்றுருந்தால் அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கும். சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.






