உருளைக்கிழங்கு உண்பதால் புற்றுநோய் வருமா?

571

உருளைக்கிழங்கு, பாண் மற்றும் உணவு வகைகளை உயர் வெப்பநிலையில் சூடாக்கிஉண்பதால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாண் போன்ற உணவு வகைகளை வெப்ப உபகரணங்கள் கொண்டு பிரவுன் நிறம் வரும் வரைசூடாக்கி உண்பதும் பொருத்தமானது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு சில உணவு வகைகளை சூடாக்கி உண்ண வேண்டும் என்றால் ஒரு முறை மாத்திரம்அதாவது தங்க மஞ்சள்(golden yellow) நிறம் வரும் வரை மாத்திரம் சூடாக்கிஉண்ணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவை அதிக வெப்பநிலையில் சூடாக்குவதன் மூலம் இரசாயன தாக்கத்திற்கு உள்ளாகிபுற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எனவே,தினசரி உணவு வேளைகளில் இயற்கை உணவுகள் பழங்கள் மற்றும் காய்கறிகளை தெரிவுசெய்து உண்ண வேண்டும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.