போலீஸ் பாதுகாப்பு கேட்டு குமரிமுத்து நீதிமன்றத்தில் மனு!!

306

kumarimuthu

நடிகர் குமரிமுத்து சென்னை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது..

நடிகர் சங்க சொத்துக்களை குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக தெரிவித்து இருந்தேன். இதையடுத்து நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து என்னை நீக்கி உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி இதை மறு பரிசீலனை செய்யும்படி நடிகர் சங்கத்தில் கோரிக்கை விடுத்தேன். அது பரிசீலிக்கப்படவில்லை.
எனவே, நாளை நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று எனது கோரிக்கையை தெரிவிக்க உள்ளேன்.

எனவே எனக்கு தகுந்த பொலிஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடும் படி கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.