பொலிஸ் உத்தியோகத்தரின் காதை கடித்து காயப்படுத்திய யுவதிக்கு சிறைத்தண்டனை!!

866

பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரின் காதை கடித்து காயப்­ப­டுத்­திய யுவதி ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதிமன்றம் ஒன்­றினால் 4 வருட சிறைத்­ தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 19 வய­தான எம்மா விலே எனும் யுவ­திக்கே இத்­தண்­டனை விதிக்கப்­பட்­டுள்­ளது. கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி அதி­காலை 00.45 மணி­ய­ளவில், வீதி­யொன்றில் எம்மாவிலேவும் மற்­றொரு பெண்­ணுக்கும் இடையில் மோதல் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, அங்கிருந்தவர்களால் பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அங்கு சென்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் எம்­மாவை கைது செய்ய முற்­பட்­ட­போது அவர் எதிர்ப்புத் தெரி­வித்தார். பின்னர், எம்­மாவை கைது செய்த பொலிஸார் அவரை பொலிஸ் வாக­னத்தில் ஏற்றியபோது, பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரான ஜெஸி க்கா ரோன்­டி­னெலின் காதை கடித்தார் என சட்­டத்­த­ரணி ஏ.ஜே. கெமி­லியோ நீதின்றில் தெரி­வித்தார்.

அவ்­வே­ளையில், பொலிஸ் திணைக்­க­ளத்தில் ஜெஸிக்கா இணைந்து 6 வாரங்­களே ஆகி­யி­ருந்­தன எனவும் இத்­தாக்­கு­த­லினால் அவ­ருக்கு இரு சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­யப்­பட்­ட­தா­கவும் சட்டத்தரணி கெம­லியோ கூறினார்.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் காதைக் கடித்த குற்­றச்­சாட்டை எம்மாவிலே ஏற்­றுக்­கொண்டார். அதைய­டுத்து மோதலில் ஈடு­பட்­ட­மைக்­காக இரண்­டரை வருட சிறைத்­தண்­ட­னையும் பொலிஸ் உத்தியோ­கத்­தரை தாக்­கிய குற்­றத்­துக்­காக ஒன்­றரை வருட சிறைத்­தண்­ட­னையும் விதித்து நீதி­பதி திமோதி ஃபீலி கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.

இவ்விரு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக எம்மா விலே அனுப விக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.