வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாளை பூரண ஆதரவு : முச்சக்கர வண்டி சாரதிகள்!!

713

வவுனியாவில் காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் நாளை (26.01.2017) காலை 8 மணியளவில் சாரதிகள் சங்கத்திலிருந்து அமைதி ஊர்வலமாக பஜார் வீதி வழியாக சென்று உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களுடன் இணையவுள்ளதாக சாரதிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விடுதலையை வலியுறுத்தியும் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இப் போராட்டத்தில் குறைந்தது ஐநஂநூறு பேருக்கு மேல் கலந்து கொள்ளவுள்ளதாகவும் வவுனியா மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் சிவலிங்கம் ரவீந்திரன் தெரிவித்தார்.