100 நாட்கள் கடலில் தனிமை : உயிரை பணயம் வைத்து உலக சாதனை படைத்த பெண்!!

509

அண்டார்டிகா கண்டத்தை யாருடைய உதவியும் இல்லாமல் தனியே சுற்றி வந்து அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

கப்பலில் மாலுமியாக பணியாற்றி வரும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர் என்ற பெண்ணே இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

அணடார்டிகா கண்டத்தில் தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த லிசா பாடகில் தனியாக 100 நாட்களில் 1,600 கடல் மைல் தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 102 நாட்களில் ஒருவர் பயணம் செய்தது சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து லிசா கூறியதாவது, கடுமையான பயிற்சி எடுத்தாலும், மன உறுதியுடன் செயல்பட்டு இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.