வெளிநாட்டிற்குச் சென்ற இலங்கைப் பெண்ணை காணவில்லை : தகவல் தெரிவியுங்கள்!!

526

லெபனான் நாட்டுக்கு தொழில் புரிய சென்ற நிலையில் காணாமல் போன எம். பஞ்சவர்ணம் என்ற பெண் தொடர்பாக தகவல்களை தேடி அறிவது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்தெரிவித்துள்ளது.

லெபனான் தூதரகத்திற்கு அந்த பெண் சம்பந்தமான தகவல்கள் அவசியம் என பணியகம்விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த பெண் பற்றிய தகவல்களை அறிந்தவர்கள் இருந்தால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்புகள் பிரிவின் 011 4379328 என்றதொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டுஅறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எம்.பஞ்சவர்ணம் என்ற இந்த பெண் 2002ம் ஆண்டு லெபனான் சென்றுள்ளார்.2006ம் ஆண்டுக்கு பின்னர் அவர் பற்றி எந்த தகவலும் உறவினர்களுக்குகிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தெரணியகலை, சமன்புரகம பிரதேசத்தை சேர்ந்த அண்ணாமலை பழனியாண்டிஎன்பவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.