டோனியிடம் கெஞ்சிய பொலிசார்!!

319

dhoni

தினமும் அதிகாலையில் டோனி பைக்கில் செல்வதை தயவு செய்து தங்களிடம் தெரிவியுங்கள் என்று அவரது குடும்பத்தினருடன் பொலிசார் கேட்டுள்ளனர்.

பைக் மீது ஆர்வம் கொண்ட அணித்தலைவர் டோனி 12க்கும் மேற்பட்ட ரகங்களில் பைக்குகள் வைத்துள்ளார். தற்போது போட்டிகளில் இல்லாமல் ராஞ்சி வீட்டில் தங்கியுள்ளார். 32 வயதான டோனி தினமும் அதிகாலையில் தனது பைக்கில் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்.

நேராக அருகிலுள்ள பிர்சா முண்டா மைதானத்துக்கு செல்லும் இவர் அங்கு இளம் வீரர்களின் கால்பந்து மற்றும் வில்வித்தை போட்டிகளின் பயிற்சிகளை பார்வையிடுகிறார். டோனியின் இந்த பைக் பயணம், உள்ளூர் பொலிசாருக்கு கூட தெரிவிக்கப் படவில்லையாம்.

இது குறித்து ராஞ்சியின் மூத்த பொலிஸ் அதிகாரி சாகேத் குமார் சிங் கூறுகையில் டோனி தினமும் காலையில் பைக்கில் சுற்றுகிறார்.
இது பிரச்னையில்லை. ஆனால், அவர் எங்கு சென்றாலும் தயவு செய்து எங்களிடம் தெரிவியுங்கள் என்று டோனி குடும்பத்தினரிடம் தெரிவித்தோம்.

ஏனெனில் அப்போது தான் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வசதியாக இருக்கும் என்றார்.