பனிக்கன்குளம் பகுதியில் விபத்து : இருவர் காயம்!!

751

 
பனிக்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இராணுவத்தினருக்கான உணவுப்பொருட்களை ஏற்றி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியோரம் நின்ற மரத்துடன் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

இதனால் பாரவூர்தி சேதமடைந்துள்ளதோடு கொண்டு செல்லப்பட்ட பொருட்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி வாகனம் உயர் வேகத்தில் வந்ததாகவும், வீதிபாதுகாப்பு பொலிசார் அதிக வேகம் காரணமாக வாகனத்தை நிறுத்த முயற்சித்த போது, அவர்களுக்கு இருநூறு மீற்றர் தூரத்திற்கு முன்னமே வாகனம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.