வவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதியில் போக்குவரத்து பாதிப்பு!!

393

 
வவுனியாவில் நேற்று (26.01.2017) இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர், போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியிளிக்கின்றது.

வேப்பங்குளம் தாழ் நிலப்பகுதியிலுள்ள 6ம் வீதியில் உள்ள 10குடும்பங்களின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அக்குடும்பம் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் திருநாவற்குளம் பகுதியிலும் சில வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. ‘

மன்னார் வீதியிலிருந்து பூங்கா வீதிக்குச் செல்லும் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

சுற்றுவட்ட வீதியிலுள்ள மரம் முறிந்து வீழ்ந்ததில் மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. எனினும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வயல் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நேற்று இரவு ஆரம்பமான மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. பாடசாலைகளில் மாணவர்கள் வரவின்றி காணப்படுகின்றது. வவுனியா நகரம் மக்களின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.