பெண்ணொருவரின் உயிரை பறித்த அன்னாசி : சிக்கலில் முகாமையாளர்!!

215

பிலியந்தலை பிரதேசத்தில் அன்னாசி பழத் துண்டொன்றை உட்கொண்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஹம்பாந்தோட்டை, மயுரபுரவில் வசிக்கும் எங்கிலிகார கலப்பத்திகே ரேணுகா மல்காந்தி என்ற 54 வயதுடைய பெண் பாதுகாப்பு அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் பாதுகாப்பு அதிகாரியின் மரணம் தொடர்பில் பிலியந்தலை மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க நேற்று முன்தினம் தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளார்.

இந்த மரண பரிசோதனை நேற்று முன்தினம் களுபோவில வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரியின் உடலின் ஒரு பகுதி அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்குமாறும், அந்த அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்ற வைத்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி குறித்த பாதுகாப்பு அதிகாரி சேவையில் ஈடுப்பட்டுள்ளார். அங்கு அதன் ஊழியர்கள் அன்னாசி மற்றும் பழங்களை வெட்டி ரெஜிபோம் பெட்டியில் போட்டுக் கொண்டிருப்பதனை பார்த்த அதிகாரி அந்த இடத்திற்கு சென்று அன்னாசி துண்டொன்றை சாப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்ட உதவி முகாமையாளர், அன்னாசி துண்டினை ஏன் இரகசியமாக சாப்பிட்டீர்கள் என கடுமையாக திட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் போது தான் இரகசியமாக அன்னாசி சாப்பிட்டதனை ஏற்றுக் கொண்டு கடிதம் ஒன்றை எழுதி தருமாறு, முகாமையாளர், குறித்த பெண் பாதுகாப்பு அதிகாரிக்கு குறிப்பிட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.