மனிதனும், பன்றியும் இணைந்த புது உயிரினம்!!

295

மனிதனையும், பன்றியையும் இணைத்து புதுமையான உயிரினம் ஒன்றை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

மனிதனின் அணுக்களை பன்றியின் கருமுட்டைக்குள் செலுத்திய விஞ்ஞானிகள், மீண்டும் கருமுட்டையை பன்றியின் உடலுக்குள் செலுத்தினர்.

இந்த உயிரினத்துக்கு Chimera என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள், எதிர்காலத்தில் மனிதனுக்கு தேவையான உடல் உறுப்புகளை பிற உயிரினங்களிடம் இருந்து வளர்க்க முடியும் என்பதை கண்டறியவே குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த முயற்சி மட்டும் வெற்றி பெற்றால், எதிர்கால தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சி ஏற்படும். எனவே இந்த ஆய்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.