கடுமையான வறுமையிலும் 60 வருட வரலாற்றை மாற்றிய மாணவி!!

847

மொனராகலை மஹாநாம தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் வணிக பிரிவில் கல்வி கற்ற மாணவி சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி மொனராகலை மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்தின் மிகவும் வறுமையான பிரதேசமான கொட்டியாகல முகலங்யாய 10ஆம் மையில் கல் பிரதேசத்தை சேர்ந்த ரொஷானி ஜயமாலி என்ற மாணவியே திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மொனராகல நகரத்தில் இருந்து 50 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், சிறிய வயது முதல் கல்வி மீது அதிக திறமை கொண்டவராக காணப்பட்டுள்ளார்

தனது வெற்றி தொடர்பில் கருத்து வெளியிட்ட ரொஷானி,

நான் முதலாவது கல்வியை கொடியாகல ஆரம்ப பாடசாலையில் ஆரம்பித்தேன். 2007ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமை பரீட்சையில் 152 புள்ளிகளை பெற்றுக் கொண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்து, மொனராகல மஹாநாம தேசிய பாடசலையில் இணைந்தேன்.

அங்கு கல்வியை சிறப்பாக மேற்கொண்டு சாதாரண தரத்தில் 7 ஏ சித்திகள் மற்றும் 2 சீ சித்திகளை பெற்றுக் கொண்டேன்.

உயர்தர கல்வியை சிறப்பாக மேற்கொண்டமையினால் 3 ஏ சித்திகளை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. பாடசாலையில் எனக்கு கற்பித்த அனைத்து ஆசிரியர்களும் என்னை சரியான பாதையில் செல்ல வழி நடத்தினர்.

கொடியாகல வித்தியாலயத்தின் 60 வருட வரலாற்றில் சிறப்பான சித்தியை பெற்ற முதல் மாணவி இவராகும். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ள நிலையில் அவர் மாத்திரமே உயர்தரத்தில் சிறப்பான சித்திகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

சமூர்த்தி உதவி பெற்று வாழும் குடும்பமாக ரொஷானியின் குடும்பம் தற்போது மண் வீடு ஒன்றிலேயே வாழ்ந்து வருகிறார். வறுமை அவரது கல்வி பயணத்தின் வெற்றிக் தடையாக காணப்படவில்லை.

விவசாய நடவடிக்கையில் வாழும் அவரது பெற்றோர் முடிந்தளவு அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு உதவியுள்ளனர். அதற்கமைய அவர் சிறப்பான சித்தியை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.