மீன்பிடிக்கச் சென்ற தந்தை, மகன் சடலமாக மீட்பு!!

303

 
மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக சென்ற தந்தை மற்றும் மகனின் சடலங்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் நேற்றிரவு ‘குள்ளா’ என அழைக்கப்படும் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் உயிரிழந்தவாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்,

மன்னார் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான ஜெஸ்மன் (வயது-49) என்பவர் தனது இளைய மகனான ஜெ.ஜெக்ஸ்சன் (வயது-9) என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு நேற்றிரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் தேடுதல் பணிகளை குடும்பத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

படகு கடலில் மூழ்கியமையினாலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.