மூன்று நாட்களுக்குமேல் காய்ச்சல் நீடித்தால் உடன் வைத்தியரை நாடுங்கள்!!

253

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடன் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டெங்கு அபாயம் காணப்படுவதனால், சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இந்த வருடத்தில் தற்போது வரையான காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 508 பேர் டெங்குநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் மேல் மாகாணத்தில் 43 வீதமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுகொள்ளுமாறும், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.