இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம் : பின்னணி என்ன?

287

இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹொட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு ஹொட்டலிலே பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களுக்கு அளித்த பயிற்சி குறித்து அவர் இன்று அறிக்கை தெரிவிக்க வேண்டியிருந்துள்ளது.

ஆனால், நேரம் கடந்தும் ராஜேஷ் சாவந்த் வராததால். அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சாவந்த் இந்தியா வருவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

சாவந்த் யுவராஜ், தோனி அடங்கிய இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ராஜேஷ் திகழ்ந்தார். அதுமட்டுமின்றி ராகுல் டிராவிட் உடன் இணக்கமான பயிற்சியாராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.