வவுனியாவில் உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கையெழுத்து வேட்டை!!

320

 
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன.

இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து நகர் பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பும் விழிப்புணர்வுச்செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செயல்திட்டத்தை மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் செயற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்திட்டத்தின்கீழ் நேற்று முன்தினம் (28.01.2017) வவுனியா காலை 10.00 மணிக்கு புட்சிட்டிக்கு அருகே இவ்வாறான பிரச்சாரமும் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

கடந்த 18ம் திகதி காலியில் ஆரம்பமான இந்த கையேழுத்து வேட்டை 03ம் திகதி தலைமன்னாரில் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.