வவுனியா மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு விழா!!

595

 
செட்டிக்குளம் மெனிக்பாம் அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடம் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் வி.தர்மகுலசிங்கம் தலைமையில் நேற்று (29.01.2017) மதியம் 1 மணிக்கு நடைபெற்றது.

வடமாகாண கல்வித்திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டடம் பாடசாலையின் அதிபர்.வி.தர்மகுலசிங்கம் அவர்களின் அழைப்பின் பேரில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படவுள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

தற்போது 25000 ஆக காணப்படுகின்ற பல்கலைக்கழக அனுமதி 50000 ஆக மாற்றப்படவுள்ளது. ஆகவே தமிழ் மாணவர்கள் இந்த மாவட்டத்திலிருந்தும் வடமாகாணத்திலிருந்தும் கிழக்கு மாகாணத்திலிருந்தும் அதிகளவான மாணவர்கள் பல்கலைக உயர்கல்விக்கு செல்ல வேண்டும் . இந்த கல்வியுடாக தான் எதிர்காலத்திலுள்ள எமது சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணமுடியும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக ந.சிவசக்தி ஆனந்தன் ( வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) , சிறப்பு விருந்தினராக த.தியாகராஜா ( வடமாகாணசபை உறுப்பினர்) , கௌரவ விருந்தினராக எஸ்.யேசுதாசன் ( கோட்டக்கல்வி பணிப்பாளர்- செட்டிக்குளம்), பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.