ரயிலில் மோதுண்டு நபரொருவர் பலி!!

238

கொழும்பு கோட்டையில் இருந்து காலி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுத்துதுறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.