இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கடலோர இந்திய கடலோர பொலிஸார் கைது செய்து படகினை பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி பகுதியில் உள்ள கடலோர காவல் படையினர் கமாண்டோ ஆனந்த குமார் தலைமையில் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுட்டு கொண்டிருந்தனர்.
கன்னியாகுமரியில் இருந்து 75 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்ததால் கடலோர காவல் படையினர் படகினை மடக்கினர்.
படகில் இருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை கைது செய்தனர். படகினை பறிமுதல் செய்து தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுள்ளனர்.