சாய்ந்தமருதில் கோர விபத்து : மூன்று குழந்தைகள் பலி, 15 பேர் காயம்!!

217

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வாகன விபத்தில வானில் வந்த 3 சிறுவர்கள் அதே இடத்தில் உயிரிழந்ததுடன் ஏனையோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அதிகாலை 5.15 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மதக்கடமைக்கு சென்றுவிட்டு தங்களது ஊரான பாலமுனை நோக்கி சென்று கொண்டிருந்த வானும், அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேருந்தும் மோதியதில் வானில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஏனையவர்கள் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்கள். இதில் இரண்டரை வயது, 4 வயது, 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளே பலியாகி உள்ளனர்.

ஏனையவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றார்கள்.